இதயத்திருடி

தெருவிளக்கின் உதவியால் மங்கிய ஒளி பூண்டிருந்தது அந்த அறை . தரையெங்கும் சிதறிக்கிடந்த பொருட்கள், ஆங்காங்கே தண்ணீர் துளிகள் . யாரோ எதையோ தேடுவதுபோல் தெரிந்தது . யாரது ? திருடனா ?  இல்லை, அவள் ஒரு திருடி, அதுவும் மழலைத்திருடி . அந்த மங்கிய ஒளியில் என்ன தேடுகிறாள்? எண்ணி முடிப்பதற்குள் எதையோ எடுத்துவிட்டாள் . தேடியதை கண்டெடுத்த பூரிப்பில் கண்களால் சிரிக்கிறாள்  கைகளால் கொண்டாடுகிறாள் பரபரப்பாக ஓடுகிறாள் கையில் பிடித்திருக்கும் பேனாவுடன், சுவரை நோக்கி - சித்திரம் தீட்ட, அந்த திருடி, என் இதயத்திருடி .
 - ஜெஸ்மா ஜேம்ஸ் 
 

Comments

Popular posts from this blog

Thank You Poems...